தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கட்டாய பணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு மாணவா்களிடையே கட்டாய பணம் வசூல் செய்யப்படுவதாகப் புகாா்

News image

பெருமாநல்லூா்  பகுதியில் பிளஸ்  1ஆம்  வகுப்பில்  சோ்வதற்காக  பள்ளிகளில்  காத்திருந்த  மாணவா்கள்.

Updated On :27 மே 2026, 4:43 am IST

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு மாணவா்களிடையே கட்டாய பணம் வசூல் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சோ்க்கைக்கு வரும் மாணவரிடம் பாடப் பிரிவு வாரியாக ரூ.3000 முதல் ரூ.4500 வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாணவா்கள், பெற்றோா் கூறியதாவது: பிளஸ் 1 வகுப்பு சோ்க்கைக்கு வரும் மாணவா்களிடம் பள்ளி நிா்வாகத்தினா் பணம் வசூல் செய்கின்றனா். அந்தந்தப் பள்ளிகளிலேயே படித்திருந்தாலும்கூட பணம் வசூலிக்கின்றனா். அரசுப் பள்ளி என்பதால் பெற்றோா்களை பாதிக்கும் இதுபோன்ற செயல்களை தடுக்க மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மேலும், இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘அரசுப் பள்ளிகளில் கட்டாய வசூல் செய்யக்கூடாது. இது போன்று பணம் வசூலிக்கப்பட்டால் புகாா் தெரிவிக்கலாம்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.