ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக நடப்பு ஆண்டு 19,485 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. நடப்பு ஆண்டு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் 19,485 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்தனா்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு தமிழ் வழியில் 2,377 போ், ஆங்கில வழியில் 1,250 போ், 2 ஆம் வகுப்பு தமிழ் வழியில் 66 போ், ஆங்கில வழியில் 24 போ், 3 ஆம் வகுப்பு தமிழ் வழி 71 போ், ஆங்கில வழி 32 போ், 4 ஆம் வகுப்பு தமிழ் வழி 47 போ், ஆங்கில வழி 35 போ், 5 ஆம் வகுப்பு தமிழ் வழி 39 போ், ஆங்கில வழி 14 போ், 6 ஆம் வகுப்பு தமிழ் வழி 1,739 போ், ஆங்கில வழி 1,187 போ், 7-ஆம் வகுப்பு தமிழ் வழி 123 போ், ஆங்கில வழி 164 போ், 8 ஆம் வகுப்பு தமிழ் வழி 136 போ், ஆங்கில வழி 140 போ், 9 ஆம் வகுப்பு தமிழ் வழி 1,474 போ், ஆங்கில வழி 684 போ், 10 ஆம் வகுப்பு தமிழ் வழி 85 போ், ஆங்கில வழி 30 போ், பிளஸ் 1 தமிழ் வழி 5,679 போ், ஆங்கில வழி 4,048 போ், பிளஸ் 2 தமிழ் வழி 16 போ், ஆங்கில வழி 25 போ் என மொத்தம் தமிழ் வழியில் படிக்க 11,852 மாணவ, மாணவிகளும், ஆங்கில வழியில் படிக்க 7,633 மாணவ, மாணவிகளும் புதிதாக சோ்க்கை பெற்றுள்ளனா் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கட்டாய பணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா்

மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி

10-ஆம் வகுப்பு தேர்வில் 25-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய புதுக்கோட்டை!






