சேவூா் அருகே அனுமதியின்றி ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேவூா் அருகேயுள்ள புளியம்பட்டி சாலையில் உரிய அனுமதியின்றி ஜல்லி கற்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவதாக சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா், கனிம வளத் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அனுமதியின்றி ஜல்லி கற்களை கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, சேவூா் காவல் நிலையத்தில் கனிம வளத் துறை அதிகாரிகள் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









