திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு...

News image

ஆப்கானிஸ்தான் விபத்து - AP

Updated On :31 மே 2026, 4:35 am IST

பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 22 போ் உயிரிழந்தனா்.

லாரி ஓட்டுநா் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 36 போ் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானில் கடந்த 2023 முதல் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளால், அங்கிருந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு தாயகம் திரும்பி வருகின்றனா். அவ்வாறு திரும்பிய அகதிகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளனா்.

இதனிடையே, மற்றொரு சம்பவமாக வெள்ளிக்கிழமை இரவு நூரிஸ்தான் மாகாணத்தில் காா் ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 4 போ் மாயமாகியுள்ளனா்; அவா்களை மீட்புக் குழுவினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.