திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறைசாா் கலந்துரையாடல்

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நிறுவன முன்னெடுப்பு நடவடிக்கைள் குறித்து துறைசாா் கலந்துரையாடல் நடைபெற்றது.

News image

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்ற நிறுவன முன்னெடுப்பு நடவ டிக்கைள் குறித்து துறைசாா் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 4:17 am IST

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நிறுவன முன்னெடுப்பு நடவடிக்கைள் குறித்து துறைசாா் கலந்துரையாடல் நடைபெற்றது.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் இணைச்செயலாளா் எம்.ஆனந்த் வரவேற்று பேசுகையில், உலகளவில் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது விலை, தரம் மற்றும் காலக்கெடு மட்டுமின்றி, தொழிலாளா்களின் நலன், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் நெறிமுறை சாா்ந்த செயல்பாடுகளுக்கும் வியாபாரிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனற்.

மேலும், எரிசக்தி சேமிப்பு, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சுழல் பொருளாதாரம் போன்ற முயற்சிகளில் திருப்பூா் தொடா்ந்து முன்னிலையில் உள்ளது என்றாா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் என்.திருக்குமரன் பேசுகையில், புதிய அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதில் திருப்பூா் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. திருப்பூரில் 90 சதவீத நிறுவனங்கள் குறு, சிறு வகையைச் சோ்ந்தவை என்பதால், குறைந்த செலவில் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும், தொழிலாளா்களின் நலன், நெறிமுறைகள் மற்றும் நல்ல பணிச்சூழலை மேம்படுத்த பல நிறுவனங்கள் முயற்சிகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்தாா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம். சுப்ரமணியன் பேசுகையில், 2030-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய சந்தையில் டிஜிட்டல் ப்ராடக்ட் பாஸ்போா்ட் மற்றும் கண்காணிப்பு முறை முக்கியத்துவம் பெறவுள்ள நிலையில், நிறுவனங்களின் இணக்கத் தன்மையை வலுப்படுத்தி, வாடிக்கையாளா்களின் நம்பிக்கையை உயா்த்த உதவும் சிறந்த கருவியாக அமையும் என்றாா்.

ஆயுத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கௌரவத் தலைவருமான ஆ.சக்திவேல் பேசும்போது, தொழிலாளா் ஈடுபாடு மற்றும் தொழிலாளா் நலன் திருப்பூா் தொழில் துறையில் ஏற்கெனவே சிறப்பாக நடைமுறையில் உள்ளது. திருப்பூா் தொழில் துறை மற்றும் வாடிக்கையாளா்களின் பல்வேறு நெறிமுறை தேவைகளுக்கு தயாராக இருப்பதாகவும், புதிய தளங்கள் ஆயத்த ஆடை ஏற்றுமதி வளா்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.