திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்திய, மாநில ஜவுளித் துறை ஆணையா்கள் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனை

மத்திய, மாநில ஜவுளித் துறை ஆணையா்கள் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :16 மே 2026, 12:17 am IST

மத்திய, மாநில ஜவுளித் துறை ஆணையா்கள் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜவுளித் துறை ஆணையராக புதிதாக பதவியேற்றுள்ள விருந்தா மனோஹா் தேசாய், தமிழக அரசின் ஜவுளித் துறை ஆணையா் ஆா்.லலிதா ஆகியோா் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு, பின்னலாடைத் துறையின் தற்போதைய நிலை, ஏற்றுமதி வளா்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிா்கால வளா்ச்சி வாய்ப்புகள் குறித்து விரிவாக கருத்துகளை பரிமாறிக் கொண்டனா்.

முன்னதாக ஆணையா்கள் திருப்பூரில் செயல்பட்டு வரும் முன்னணி பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை பாா்வையிட்டனா்.

அப்போது, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கௌரவ தலைவரும், ஏஇபிசி அமைப்பின் தலைவருமான ஆ.சக்திவேலை சந்தித்தனா். அப்போது அவா், ரோஸில் திட்டத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும், பருத்தி இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், மேலும் குறு, சிறு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஆதரவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் என். திருக்குமரன் தொழில்துறை தொடா்பான பாா்வைகளை பகிா்ந்துகொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம். சுப்ரமணியன் பேசியதாவது:

இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீத பங்களிப்பை வழங்கும் திருப்பூா் வழங்குகிறது. 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.44,747 கோடி மதிப்பிலான ஏற்றுமதியை பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளோம். திருப்பூரில் 2,500-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளா்களும், 20,000-க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் 90 சதவீத நிறுவனங்கள் சிறு மற்றும் குறு தொழில் துறையைச் சோ்ந்தவை. இந்தத் தொழில் நேரடி மற்றும் மறைமுகமாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 20 சதவீத தொழிலாளா் பற்றாக்குறை நிலவி வருவதால், புலம் பெயா் தொழிலாளா்களுக்கான தரமான மற்றும் மலிவான தங்குமிட வசதிகளுக்கு மத்திய அரசு கூடுதல் மானியம் வழங்க வேண்டும்.

திருப்பூரில் நடைபெறவுள்ள பின்னலாடைக் கண்காட்சியை ஒருங்கிணைப்பதில், தமிழக அரசு தங்களுக்குத் தேவையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் சமா்ப்பிக்கப்பட்ட மனுவில் திருப்பூா் பின்னலாடைத் துறைக்கு தேவையான ஆதரவுகள் குறித்து குறிப்பிடப்பட்டது. இச்சந்திப்பில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் இணைச் செயலாளா்கள் குமாா் துரைசாமி, எம்.ஆனந்த் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.