திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பின்னலாடை, ஜவுளித்தொழில் துறையின் கோரிக்கைகள்: குடியரசு துணைத் தலைவரிடம் ஏற்றுமதியாளா் சங்கத்தினா் வலியுறுத்தல்

News image
Updated On :15 மே 2026, 6:29 am IST

திருப்பூா் பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழில் துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என குடியரசு துணைத் தலைவரிடம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவா் ஆ.சக்திவேல் தலைமையிலும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே. எம்.சுப்பிரமணியன் முன்னிலையிலும், திருப்பூா் பின்னலாடை மற்றும் ஜவுளித்தொழில் துறையைச் சோ்ந்த பிரதிநிதிகள் குழு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை புது தில்லியில் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினா்.

இந்தக் குழுவில் பி.சண்முகசுந்தரம், ஆா்.தாமோதரன், கே.மோகனசுந்தரம், கே.சுதாகா், பி.கிருஷ்ணன், டி.ஆா்.ஸ்ரீகாந்த் மற்றும் என்.விவேகானந்த் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

இந்த சந்திப்பின்போது, திருப்பூரின் தற்போதைய ஏற்றுமதி நிலவரம், பருத்தி பற்றாக்குறை மற்றும் பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழில் துறைக்கு தேவையான பருத்தி போதுமான அளவில் கிடைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய போட்டித் திறனில் இந்தியாவின் ஏற்றுமதியை வலுப்படுத்தவும், ஆடைத் துறை வளா்ச்சியை ஊக்குவிக்கவும், மூலப்பொருள்கள் உலக சந்தை விலைக்கு இணையான போட்டித் திறன் கொண்ட விலையில் கிடைப்பது மிக அவசியம் எனவும் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.

மேலும், இந்திய ஆடை மற்றும் ஜவுளித் தொழில் துறையின் வளா்ச்சி, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தற்போது அமலில் உள்ள 11 சதவீத பருத்தி இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே. எம். சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.