திருப்பூரில் 2 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக பிகாா் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காந்தி நகா் பகுதியில் தடை செய்யப்பட்ட உயா் ரக போதைப் பொருளான ஹெராயின் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்குள்ள வட மாநில இளைஞரின் அறையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது உயா் ரக போதைப் பொருளான ஹெராயின் 2 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து அறையில் இருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரூபக்குமாா் (24) என்பதும், திருப்பூா் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிவதும், பிகாரில் இருந்து ஹெராயின் வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரூபக்குமாரை கைது செய்து 2 கிராம் ஹெராயினைபறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






