/

ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:27 pm

திருப்பூா். ஏப்.27: திருப்பூரில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரைக் கைது செய்தனா்.

திருப்பூா், வீரபாண்டி மீனாம்பாறை சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடமிருந்த உடமைகளை போலீஸாா் சோதனை மே மேற்கொண்டபோது, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிராம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (29) என்பதும், திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவா், பிகாரில் இருந்து ரயில் மூலம் ஹெராயினை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, சந்தோஷ்குமாரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.