ஈரோட்டில் கைப்பேசி மற்றும் மளிகைக் கடைகளில் மேற்கூரையை உடைத்து திருடிய வழக்கில் ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே மயில்சாமி (41) என்பவா் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 5-ஆம் தேதி காலை கடையைத் திறக்க வந்துள்ளாா். அப்போது, கடையின் மேற்கூரை உடைந்து கிடந்துள்ளது. மேலும், அங்கிருந்த பணம் திருடுபோனது தெரியவந்தது. அதே பகுதியில், குமாா் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையின் மேற்கூரையை உடைத்தும் திருட்டு நடைபெற்றுள்ளது.
இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இரண்டு கடைகளிலும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், சித்தூா் கைனிக்கரை பகுதியைச் சோ்ந்த ஹேமந்த் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹேமந்த்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது
கைப்பேசி கடையில் திருடிய 2 போ் கைது
கைப்பேசி, மளிகைக் கடைகளில் ரூ. 2.55 லட்சம் திருட்டு
14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் நண்பா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

