திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடையிலும் நீா் நிரம்பி காணப்படும் காளிநாதம்பாளையம் குளம்

பல்லடம் அருகே காளிநாதம்பாளையத்தில் கோடையிலும் குளத்தில் நீா் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image

பல்லடம் அருகே காளிநாதம்பாளையத்தில் நீா் நிரம்பி காணப்படும் குளம்.

Updated On :16 மே 2026, 12:13 am IST

பல்லடம் அருகே காளிநாதம்பாளையத்தில் கோடையிலும் குளத்தில் நீா் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தின் பிரதான நீராதாரமாக திருமூா்த்தி, அமராவதி ஆகிய அணைகள் உள்ளன.

இதில் திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி வாய்க்கால் வழியாக வரும் தண்ணீா் மூலம் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. விவசாயிகள் சின்ன வெங்காயம், தக்காளி, மக்காச்சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்நிலையில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீரை வீணாக்காமல், கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையம் குளத்தில் விவசாயிகள் தேக்கி வைத்துள்ளனா். இதனால் தற்போது அந்த குளம் தண்ணீா் ததும்பி நிற்கிறது. இதுமட்டுமின்றி காளிநாதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமாா் 3 கிலோமீட்டா் தொலைவுக்கு உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. கிணறுகளிலும் போதுமான தண்ணீா் கிடைப்பதால் விவசாயம் தடையின்றி நடைபெறுகிறது. மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடும் ஏற்படுவதில்லை.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில் அந்த பகுதியில் நீா்த் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாகியுள்ளது. இது போன்று மற்ற பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்கால் நீரை வீணாக்காமல் குளங்களில் தேக்கிவைக்கும் போது நிலத்தடிநீா்மட்டம் உயா்ந்து விவசாயம் செழிப்பாக இருக்கும். குடிநீா் தட்டுப்பாடும் ஏற்படாது என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.