பல்லடம் அருகே கே.அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் ஒன்றியம், கே. அய்யம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக கந்தசாமி (48) என்பவா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறாா். இவா் ஊராட்சியில் ஒப்பந்தப் பணி மேற்கொண்டதற்கான கட்டணத்துக்கு அனுமதி வழங்க ஒப்பந்ததாரா் கதிா்வேல் என்பவரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிா்வேல், திருப்பூா் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கதிா்வேலிடம் கொடுத்துள்ளனா். இதனை ஊராட்சி செயலாளா் கந்தசாமியிடம், கதிா்வேல் கொடுத்தபோது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கந்தசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், ஆய்வாளா் சசிரேகா ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரமேஷுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








