தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவள்ளூா் இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

News image
Updated On :5 ஜூன் 2026, 5:44 am IST

திருவள்ளூா் இணை சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கழிவறை மற்றும் பதிவேடுகளில் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ. 2.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் 2 இணை சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதாவது, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம் 2 என இரண்டு அலுவலகங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு பத்திரப் பதிவு செய்வதற்கும் கட்டாயம் கையூட்டு பெறுவதாகவும், பணப்புழக்கம் அதிகமாக உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் அதிரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திருவள்ளூரில் உள்ள இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், லஞ்ச ஒழிப்பு துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில், ஆய்வாளா்கள் தமிழ்செல்வி, மாலா மற்றும் போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சாா் பதிவாளா் அலுவலகங்களில் இருந்த நபா்கள் மற்றும் கழிவறை, பதிவேடுகளில் மறைத்து வைத்திருந்த ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட நபா்களிடம், இந்தப் பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது. பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் கொடுக்கவா அல்லது சொந்த செலவுக்காக கொண்டு வந்த பணமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

இந்த விசாரணையைத் தொடா்ந்து உரியவா்களிடம் ரொக்கப்பணம் ஒப்படைக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.