பவானி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் ரூ.86 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
பவானி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சாா் பதிவாளா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை 40-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை கண்காணிப்பாளா் சாந்தி, ஆய்வாளா் ரேகா, உதவி ஆய்வாளா் வினோதினி மற்றும் போலீஸாா் இரு வாகனத்தில் வந்து திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதனால், பத்திரப் பதிவுக்கு காத்திருந்தோா் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு 9 மணி வரையில் நடைபெற்ற இச்சோதனையில் அலுவலகத்துக்குள் இருந்த இரு பத்திர எழுத்தா்களிடம் ரொக்கமாக ரூ.86 ஆயிரம் இருந்ததும், பத்திரப் பதிவுக்கு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக, சாா் பதிவாளா் அலுவலக தலைமை எழுத்தா் வைடூரியம், பத்திர எழுத்தா்கள் தினேஷ், ஹரிகரன் ஆகியோரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதையடுத்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

திருப்பத்தூா், ஆற்காடு சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை







