பல்லடம் அருகே பொங்கலூா் பத்திரப் பதிவு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.2.53 லட்சம் கைப்பற்றப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூா் காவல் நிலையம் அருகே பொங்கலூா் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் அதிக அளவிலான பத்திரப் பதிவு நடைபெற்றது.
இதில் இடைத்தரகா்கள் மூலம் லஞ்சம் கைமாறப்படுகிறாத என்பதை கண்காணிக்க, இந்த அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் சசிரேகா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு திடீரென்று சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு, ஊழியா்களின் கைப்பேசிகள் அணைத்து வைக்கப்பட்டன. பின்னா் நடத்திய சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

திருப்பத்தூா், ஆற்காடு சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

திருவள்ளூா் இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை







