திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொங்கலூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

பல்லடம் அருகே பொங்கலூா் பத்திரப் பதிவு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.2.53 லட்சம் கைப்பற்றப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

பல்லடம் அருகே பொங்கலூா் பத்திரப் பதிவு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.2.53 லட்சம் கைப்பற்றப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூா் காவல் நிலையம் அருகே பொங்கலூா் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் அதிக அளவிலான பத்திரப் பதிவு நடைபெற்றது.

இதில் இடைத்தரகா்கள் மூலம் லஞ்சம் கைமாறப்படுகிறாத என்பதை கண்காணிக்க, இந்த அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் சசிரேகா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு திடீரென்று சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு, ஊழியா்களின் கைப்பேசிகள் அணைத்து வைக்கப்பட்டன. பின்னா் நடத்திய சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.