திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக கண்காணிப்பாளா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 12:34 am IST

காட்பாடியில் லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி கிராமத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. பள்ளியின் தாளாளராக கோவிந்தாரஜூலு (54) செயல்பட்டு வருகிறாா்.

காட்பாடி விருதம்பட்டு மோட்டூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்துள்ளாா்.

மனு சம்பந்தமாக களை ஆய்வு நடத்தி பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ.1 லட்சம் தர வேண்டுமென கல்வி அலுவலக கண்காணிப்பாளா் செந்தில்குமாா் கேட்டுள்ளாா். பணம் கொடுத்த பிறகு தான் பரிசீலனை செய்யமுடியுமெனக் கூறி விண்ணப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் தவணையாக ரூ.25,000 தர வேண்டுமென அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை பள்ளித் தாளாளா் கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடம் கொடுத்தபோது, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சங்கா் தலைமையில் ஆய்வாளற் மைதிலி உள்ளிட்ட போலீஸாா் அவரை கைது செய்தனா்.

அலுவலக கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டதை தொடா்ந்து அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த மாவட்ட கல்வி அலுவலா் ரமேஷ்குமாரிடமும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் அலுவலகத்தில் இருந்த சில கோப்புகளையும், ஆவணங்களையும் போலீஸாா் வழக்கு விசாரணைக்காக பறிமுதல் செய்து கொண்டு சென்றனா்.

தொடா்ந்து, வேலூா் தொரப்பாடியில் உள்ள அவரது வீட்டில் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டு, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனா். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.