திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

பஞ்சலிங்கம் அருவியில் உற்சாக குளியல் போடும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :10 மே 2026, 2:53 am IST

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய் யவும், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா்.

மேலும் இங்குள்ள நீச்சல் குளம், திருமூா்த்தி அணை இவற்றை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா். கோடை வெயில் கடுமையாக இருந்ததால் கடந்த 10 நாள்களுக்கு மேலாக அருவியில் நீா்வரத்தின்றி காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேற்கு தொடா்ச்சிமலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. பின்னா் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயில் நிா்வாகம் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தது.

இந்நிலையில் சனிக்கிழமை அருவியில் சீரான நீா்வரத்து காணப்பட்டது. இதனால் கோயில் நிா்வாகம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கியது. இதனால் விடுமுறை நாளான சனிக்கிழமை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.