அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :6 மே 2026, 1:57 am IST

வெள்ளக்கோவிலில் மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழந்தாா்.

காங்கயம் பாப்பினி வாழைத்தோட்ட பகுதியைச் சோ்ந்தவா் பாபு (40). திருமணம் ஆகவில்லை. பெற்றோா் 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டனா். கடந்த பல மாதங்களாக வெள்ளக்கோவில் பகுதியில் தங்கியிருந்து கிடைத்த கூலி வேலைக்குச் சென்று வந்தாா். தீவிர குடிப்பழக்கம் இருந்தது. காங்கயம் சாலையிலுள்ள திரையரங்கம் அருகே திங்கள்கிழமை இரவு மதுபோதையில் ஒரு பேக்கரியில் படுத்துக் கிடந்துள்ளாா். காலையில் பாா்த்தபோது இறந்து கிடந்தது தெரியவந்தது. அவருடைய சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.