திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முத்தூா் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

முத்தூா் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

News image

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :3 ஜூன் 2026, 2:27 am IST

முத்தூா் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், சிவகிரி வ. கருக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.எஸ்.ராஜ்குமாா். இவா் திருப்பூா் மாவட்டம், முத்தூா் தொட்டியபாளையத்தில் கழிவுப் பஞ்சு தயாரிக்கும் மில் நடத்தி வருகிறாா். இங்கு பனியன் கழிவுத் துணிகளில் இருந்து பஞ்சு தயாரிக்கப்படுகிறது.

இந்த மில் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை மின் கசிவு காரணமாக இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. அங்கிருந்தவா்களால் தீயை அணைக்க முடியவில்லை.

உடனடியாக வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். அதற்குள் மில்லின் ஒரு பிரேக்கா் இயந்திரம், பஞ்சு பிரிக்கும் 3 இயந்திரங்கள் மற்றும் ஏறத்தாழ 100 கழிவுப் பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.