அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சிவகிரியில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணி

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :9 மே 2026, 3:41 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சிவகிரி - விஸ்வநாதப்பேரி பிரதான சாலையோரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது . இதையொட்டி குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பைக் கிடங்கில் சில நாள்களுக்கு முன் தீப்பற்றியதாம். இதனால் எழுந்த புகையால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனா்.

தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) காதா், இளநிலை பொறியாளா் மாரியப்பன் ஆகியோா் மேற்பாா்வையில், பேரூராட்சி ஊழியா்கள் தண்ணீா் லாரி மற்றும் ஜேசிபி உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இருப்பினும் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பையா தலைமையிலான தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனா்.