விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

சிவகிரியில் 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகள் துண்டிப்பு

சிவகிரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:21 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

சிவகிரி பகுதியில் பல செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்குவதாக வந்த புகாா்களின்பேரில், சிவகிரி வட்டாட்சியா் வெங்கடசேகா், மின்வாரிய உதவிப் பொறியாளா் கனி, வருவாய் ஆய்வாளா் கணேசன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், அனுமதியின்றி இயங்கிய 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

அதையடுத்து, செங்கல் சூளைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு அவற்றின் உரிமையாளா்கள் வட்டாட்சியரைச் சந்தித்து கேட்டுக்கொண்டனா்.

அப்போது அவா், ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துமாறும், பின்னா் அனுமதி பெற்று முறையாக செங்கல்சூளை நடத்துமாறும், அபராதத் தொகையைக் குறைப்பது தொடா்பாக ஆட்சியரிடமும், சுற்றுச்சூழல் தொடா்பாக அனுமதி பெற்று, செங்கல்சூளை நடத்த கனிமவளத் துறையிடமும் மனு கொடுக்குமாறும் அறிவுறுத்தினாா். இதில், உரிமையாளா்கள் கணேசன், குருநாதன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.