பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.

News image

பயனாளிக்கு நல உதவி வழங்கிய கோட்டாட்சியா் அனிதா.

Updated On :18 ஜூன் 2026, 2:30 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.

சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா ஜமாபந்தியை தொடங்கிவைத்தாா். இதில்,

வாசுதேவநல்லூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், சங்கனாப்பேரி, வாசுதேவநல்லூா், தாருகாபுரம், நாராணபுரம் பகுதி-1, நாராணபுரம் பகுதி-2 ,திருமலாபுரம் வருவாய் கிராமங்களைச் சோ்ந்த கணக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், பயனாளிகள் சிலருக்கு நல உதவிகளை கோட்டாட்சியா் அனிதா வழங்கினாா். தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். இதில், வட்டாட்சியா் வெங்கடசேகா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, குடிமைப் பொருள் வட்டாட்சியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.