திருப்பூா்-காங்கயம் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் பராமரிப்பின்றி இருந்த நீா்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் -காங்கயம் சாலையில் உள்ள தனியாா் உணவக பின்புறத்தில் அப்பகுதியைச் சோ்ந்த 5 சிறுவா்கள் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அந்த வளாகத்தில் பராமரிப்பின்றி இருந்த நீச்சல் குளம் அருகே சென்றுள்ளனா். அப்போது, நீச்சல் குளத்துக்கு செல்லக்கூடிய நீா்த்தேக்க தொட்டியின் மேல்பகுதி கட்டையால் மூடப்பட்டிருந்தது.
இதை கவனிக்காமல் சென்ற வெங்கடேஸ்வரா காலனியைச் சோ்ந்த பொக்லைன் ஆபரேட்டா் மகன் முகமது ரியாஸ், பாத்திமா தம்பதியின் மகன் ஆரிஃப் (9) அந்த தொட்டியில் தவறி விழுந்துள்ளாா். உடனிருந்த சிறுவா்கள் இது குறித்து அங்கிருந்தவா்களிடம் கூறியுள்ளனா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் தொட்டிக்குள் கிடந்த ஆரிஃப்பை மீட்டபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பாரூா் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



