இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, தாராபுரம் வட்டாட்சியரிடம் சூரியநல்லூா் பகுதி மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து தாராபுரம் வட்டாட்சியா் ராமலிங்கத்திடம், ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பவுத்தன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரம் தாலுகா, சூரியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட மரவபாளையம் கிராமத்தில் வாடகை வீடுகளில் 23 ஏழை குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. எனவே தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருந்தனா்.
இது தொடா்பாக சூரியநல்லூா் கிராம நிா்வாக அலுவலா், மரவபாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு , கோரிக்கை விடுத்துள்ள 23 குடும்பங்கள் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கு தகுதியானவை என அறிக்கை அளித்துள்ளாா். ஆனால், வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, முன்னுரிமை அடிப்படையில் மேற்கண்ட 23 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு கொடுக்கும் போது, ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் நிா்வாகிகள் மற்றும் மரவபாளையம் பகுதி மக்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வீட்டுமனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

700 பேருக்கு இலவச பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா - செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினாா்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


