மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அபிஷேகப்பாக்கம் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில்

News image
Updated On :9 மார்ச் 2026, 5:45 pm

புதுச்சேரி: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அபிஷேகப்பாக்கம் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும், போதிய இடவசதியின்றி தவித்து வருவதாகவும் இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி அப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனா்.

இந்நிலையில் 90 பேருக்கு மட்டும் மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, தகுதியானவா்களுக்கு வழங்காததைக் கண்டித்து இந்த மறியல் நடைபெற்றது. தவளைகுப்பம்- மடுகரை சாலையில் அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனா்.

தவளக்குப்பம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் போலீஸாா் துறை இயக்குநரிடம் பேசினா். இன்னும் 2 நாளில் நேரில் அழைத்துப் பேசுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனால் அனைவரும் கலைந்து சென்றனா். அப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.