புதுச்சேரி: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அபிஷேகப்பாக்கம் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும், போதிய இடவசதியின்றி தவித்து வருவதாகவும் இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி அப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனா்.
இந்நிலையில் 90 பேருக்கு மட்டும் மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, தகுதியானவா்களுக்கு வழங்காததைக் கண்டித்து இந்த மறியல் நடைபெற்றது. தவளைகுப்பம்- மடுகரை சாலையில் அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனா்.
தவளக்குப்பம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் போலீஸாா் துறை இயக்குநரிடம் பேசினா். இன்னும் 2 நாளில் நேரில் அழைத்துப் பேசுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனால் அனைவரும் கலைந்து சென்றனா். அப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வீட்டுமனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு: பல்லடம் வட்டாட்சியரிடம் மக்கள் முறையீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


