இச்சிப்பட்டியில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
பல்லடம் வட்டம், இச்சிப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 68 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதில் தகுதியான பயனாளிகள் சிலா் மட்டுமே உள்ளனா். மற்றவா்கள் வெளியூரைச் சோ்ந்தவா்கள் என்றும், இலவச வீட்டுமனைப் பட்டா பெற தகுதியுடையவா்கள் அல்ல என்றும் கிராம மக்கள் கூறுகின்றனா். முறைகேடாக பலருக்கு வழங்கப்பட்டுள்ளதால் குளறுபடிகள் உள்ளன.
இச்சிப்பட்டியில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பலா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்லடம் வட்டாட்சியா் ராஜேஷிடம் கோரிக்கை மனுவை இச்சிப்பட்டி கிராம மக்கள் வழங்கினா்.
இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று வட்டாட்சியா் அளித்த உறுதிமொழியை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

ராசிபுரத்தில் 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்

திருச்சியில் 87 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


