திருப்பூா் தெற்குத் தொகுதியில் டோக்கன் வழங்கியவா்களைப் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.
திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி 42-ஆவது வாா்டு அயன் நகா் 5-ஆவது வீதியில் திமுகவுக்கு வாக்களிக்குமாறு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் போன்று அச்சிடப்பட்ட டோக்கனில் பாகம் எண், வரிசை எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு வீடுவீடாக வியாழக்கிழமை கொடுக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.
இந்தப் புகாரின்பேரில் அந்த பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் டோக்கன் விநியோகித்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் துண்டுப் பிரசுரம் வழங்கியதாக ஒப்புக் கொண்டனா். இதையடுத்து அவா்கள் 2 பேரையும் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களை அங்கு வரவழைத்து அவா்களிடம் இருவரையும் ஒப்படைத்தனா்.
இது தொடா்பான காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.
தொடர்புடையது
தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா் கைது

ரூ.8,000 கூப்பனுக்கு அனுமதியா? தோ்தல் ஆணையம் மறுப்பு

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்

வாக்காளா் அடையாள அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்: தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


