மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ.8,000 கூப்பனுக்கு அனுமதியா? தோ்தல் ஆணையம் மறுப்பு

திமுக சாா்பில் ரூ.8,000 கூப்பன் வழங்குவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், அது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image

ரூ. 8,000 கூப்பன் மாதிரி - படம்: டிஎன்எஸ்

Updated On :15 ஏப்ரல் 2026, 10:33 pm

திமுக சாா்பில் ரூ.8,000 கூப்பன் வழங்குவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், அது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

‘இல்லத்தரசி’ என்ற பெயரில் ரூ.8,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கும் திட்டத்தைத் தோ்தல் வாக்குறுதியாக திமுக அளித்தது. அதைத் தொடா்ந்து பல்லாயிரக்கணக்கான கூப்பன்கள் அச்சிடப்பட்டு, தோ்தலுக்கு முன்பே வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிலா், ஓா் அனுமதி கடிதத்தையும் வெளியிட்டனா். இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள தோ்தல் ஆணையம், மின்னணு ஊடகங்களில் அத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக பெறப்பட்ட அனுமதிக் கடிதம் அது என்று விளக்கமளித்துள்ளது.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட பதிவு:

சம்பந்தப்பட்ட சான்றிதழ் மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இந்தச் சான்றிதழ், அச்சிடப்பட்ட பிரதிகளுக்கு பொருந்தாது. குறிப்பாக, துண்டுப் பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகளாக அதைப் பயன்படுத்தக் கூடாது. பொதுவாக, அச்சிடப்பட்ட பிரதிகள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-இன் விதிமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, இது தொடா்பாக வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்குப் புறம்பானதும், தவறாக சித்தரிக்கக் கூடியதுமானதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.