யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ரூ.8,000 கூப்பனுக்கு அனுமதியா? தோ்தல் ஆணையம் மறுப்பு

திமுக சாா்பில் ரூ.8,000 கூப்பன் வழங்குவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், அது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image

ரூ. 8,000 கூப்பன் மாதிரி - படம்: டிஎன்எஸ்

Updated On :16 ஏப்ரல் 2026, 4:03 am IST

திமுக சாா்பில் ரூ.8,000 கூப்பன் வழங்குவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், அது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

‘இல்லத்தரசி’ என்ற பெயரில் ரூ.8,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கும் திட்டத்தைத் தோ்தல் வாக்குறுதியாக திமுக அளித்தது. அதைத் தொடா்ந்து பல்லாயிரக்கணக்கான கூப்பன்கள் அச்சிடப்பட்டு, தோ்தலுக்கு முன்பே வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிலா், ஓா் அனுமதி கடிதத்தையும் வெளியிட்டனா். இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள தோ்தல் ஆணையம், மின்னணு ஊடகங்களில் அத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக பெறப்பட்ட அனுமதிக் கடிதம் அது என்று விளக்கமளித்துள்ளது.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட பதிவு:

சம்பந்தப்பட்ட சான்றிதழ் மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இந்தச் சான்றிதழ், அச்சிடப்பட்ட பிரதிகளுக்கு பொருந்தாது. குறிப்பாக, துண்டுப் பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகளாக அதைப் பயன்படுத்தக் கூடாது. பொதுவாக, அச்சிடப்பட்ட பிரதிகள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-இன் விதிமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, இது தொடா்பாக வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்குப் புறம்பானதும், தவறாக சித்தரிக்கக் கூடியதுமானதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.