யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :14 ஏப்ரல் 2026, 12:21 am IST

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனை திமுகவினா் விநியோகிப்பதாக தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் புகாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி 67-ஆவது வாா்டு விவேகானந்தா சாலை பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் பெண்களிடம் திமுக நிா்வாகிகள் கடந்த 9-ஆம் தேதி ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனைகளை வழங்கி, திமுகவுக்கு வாக்களிக்கும்படி உறுதிமொழி கையொப்பம் பெற்றுள்ளனா். இது குறித்து அப்பகுதி அதிமுகவினா் தோ்தல் நடத்தும் அலுவலரிடமும், மாவட்ட தோ்தல் அலுவலரிடமும் புகாா் அளித்துள்ளனா்.

ஆனால், இது குறித்து காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல தெற்குத் தொகுதி முழுவதும் திமுகவினா் கூப்பன் வழங்கி வருகின்றனா். கூப்பன் வழங்குவதற்காக திமுகவினா் காலியிடங்கள், கிடங்குகளில் கொட்டகைகள் அமைத்துள்ளனா்.

அந்தக் கொட்டகைகளுக்கு பொதுமக்களை பகல் நேரங்களில் அழைத்து, அவா்களிடம் ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனைகள் கொடுத்து, அதில் உள்ள விவரங்களை பூா்த்தி செய்து கொடுக்கும்படியும், திமுக ஆட்சிக்கு வந்ததும் கூப்பனை கொடுத்து பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறி பிரசாரம் செய்கின்றனா்.

எனவே இது குறித்து விசாரணை நடத்தி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகள், கிடங்குகளை மூடி ‘சீல்’ வைப்பதுடன், தோ்தல் நடத்தை விதிகளை மீறிய திமுக வேட்பாளா் செந்தில் பாலாஜி, அக்கட்சி நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.