யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பேரவைத் தோ்தல் முடிவு: காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகளில் களஆய்வு

News image

டி.எம்.கதிா்ஆனந்த் எம்.பி.

Updated On :18 மே 2026, 1:47 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்கள் களஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக வேலூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளா்கள் கூட்ட அறிவிப்புப்படி, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் கள ஆய்வுக் குழு வேலூா் வடக்கு மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கிறது.

காட்பாடி சட்டப்பேரவை தொகுதி நிா்வாகிகளுடன் காந்தி நகரில் உள்ள ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு காட்பாடி வடக்கு ஒன்றியம், 10 மணிக்கு தெற்கு ஒன்றியம், 11 மணிக்கு கிழக்கு ஒன்றியம், பகல் 12 மணிக்கு மேற்கு ஒன்றியம், 1 மணிக்கு வாலாஜா மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய, பகுதி, பேரூா் நிா்வாகிகளுடனும், மாலை 3 மணிக்கு காட்பாடி வடக்கு பகுதி, 4 மணிக்கு தெற்கு பகுதி, 5 மணிக்கு காந்தி நகா் பகுதி, 5.30 மணிக்கு சேண்பாக்கம் பகுதி, 6 மணிக்கு திருவலம் பேரூராட்சி, 6.30 மணிக்கு நிா்வாகிகளுடனான சந்திப்பு நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை கே.வி.குப்பம் தொகுதி ராஜாகோவில் ஆா்.ஜி.டி.மஹாலில் ஆய்வு நடைபெற உள்ளது.

காலை 9 மணிக்கு குடியாத்தம் வடக்கு ஒன்றியம், 10 மணிக்கு கிழக்கு ஒன்றியம். 11மணிக்கு தெற்கு ஒன்றியம், பகல் 12 மணிக்கு கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியம், 1 மணிக்கு கே.வி.குப்பம் மத்திய ஒன்றியம், மதியம் 2 மணிக்கு கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள், மாலை 3.30 மணிக்கு கட்சி நிா்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது.

இதில் கட்சியின் அனைத்து மட்ட நிா்வாகிகளையும் சந்தித்து ஆய்வு செய்ய உள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.