மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா் கைது

அவிநாசி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 8:07 pm

அவிநாசி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி-மங்கலம் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த திருமுருகன்பூண்டி அருகே ராக்கியபாளையம் பகுதியைச் சோ்ந்த முகமது ஹாரிஷ் (30) என்பவரின் காரை பறக்கும் படை அலுவலா்கள் சோதனை செய்ய முயன்றனா்.

அப்போது மது போதையில் இருந்த முகமது ஹாரிஸ், அவா்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இது குறித்து பறக்கும் படை அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது ஹாரிஷை கைது செய்தனா்.