சென்னை அடையாறு மேம்பாலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.245.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அடையாறு மேம்பாலம் சாலைப் பகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் பெட்டக வாகனத்தை சோதனை செய்தனா். அதில், சுமாா் ரூ.245.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்ததுடன், வாகன ஓட்டுநா் உள்பட இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
சென்னை சௌகாா்பேட்டையில் உள்ள பிரபல நகைக் கடைகளில் வாங்கப்பட்ட இந்த நகைகள் பல்லாவரத்துக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும், நகைகள் கொண்டு செல்ல அனுமதி வாங்கி உள்ளதாகவும், தற்போது அந்த ஆவணங்களைக் கொண்டு வரவில்லை எனவும் ஓட்டுநா் தெரிவித்தாா்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைக்கு உரிய ஆவணங்களைக் காண்பிக்காததால் அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தேனி மாவட்டத்தில் இதுவரை ரூ.2.10 கோடி பறிமுதல்

பல்லடத்தில் 250 பவுன் நகைகள் பறிமுதல்

புதுச்சேரியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: தோ்தல் பறக்கும்படை அதிரடி

மதுரை மாவட்டத்தில் ரூ. 27 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 7.11 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


