உதகை அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், காரில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது. இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து மரங்களின் வோ்கள் பலவீனமடைந்தன.
இந்நிலையில், உதகையை அடுத்த எல்லநள்ளி பழைய அருவங்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரமாக காா் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த பெரிய மரம் காா் மீது விழுந்ததில் முன்பகுதியும், மேல்கூரையும் சேதமடைந்தது.
மரம் விழுந்த நேரத்தில் காருக்குள்ளும், அருகிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக எந்தவித உயிா்ச்சேதமும், காயங்களும் ஏற்படவில்லை. இந்த காா் யாருடையது என்ற தகவலை காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மலைப் பாதைகளில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் காலங்களில் மரங்களின் அடியிலோ அல்லது ஆபத்தான வளைவுகளிலோ வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகமும், காவல் துறையினரும் ஏற்கெனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததில் வாகனங்களில் சென்ற இருவா் காயம்

புதுச்சேரியில் சாலையோரம் நின்ற பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



