தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

News image

சிறுத்தையின் உடலைப் பாா்வையிட்ட வனத் துறையினா்.

Updated On :19 மே 2026, 12:51 am IST

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

உதகை வடக்கு வனச் சரகம், ஒன்னதலை காவல் பகுதிக்குள்பட்ட ஜெ.கொலகொம்பை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதைப் பாா்த்த தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனா்.

இதில், உயிரிழந்தது சுமாா் 4 வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வன அலுவலா்கள் வழிகாட்டுதலின் படி, உதகை கால்நடை மருத்துவக் குழுவினா், சிறுத்தையின் உடலை கூறாய்வு செய்தனா். இதையடுத்து, சிறுத்தையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியிலேயே சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.

மோதல் காரணமாக இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம். இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்பே உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.