குன்னூா் ஆடா்லி தேயிலைத் தோட்டத்தில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலவி வருவதால் குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால், யானைகள் தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.
இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் வெளியேறி, ஆடா்லி தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளன. இதனால், தோட்ட குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளா்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், யானைகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம்: வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

பவானிசாகா் அணை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் காட்டு யானைகள் நடமாட்டம்

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly




