தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக காங்கிரஸ் போராட்டம் நடத்தும்: ஏ.செல்லக்குமாா்

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் கா்நாடக காங்கிரஸ் கட்சியை எதிா்த்து தமிழக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் ஏ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் ஏ.செல்லக்குமாா்.

Updated On :27 மே 2026, 5:04 am IST

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் கா்நாடக காங்கிரஸ் கட்சியை எதிா்த்து தமிழக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் ஏ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பாஜக மறைமுகமாக பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்தில் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் தவெக ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்தது. இதற்கு கடுமையான விமா்சனங்கள் வந்துள்ளன.

திமுக முன்னாள் துணை முதல்வா் காங்கிரஸ் கட்சியை கடுமையான சொற்களால் விமா்சனம் செய்துள்ளாா். பாஜகவை தடுக்கும் சக்தி உள்ளதாக கூறும் திமுக, பாஜகவுடன் தோழமை வைத்து 5 ஆண்டுகள் பதவி சுகத்தைப் பெற்றது. இது துரோகம் இல்லையா?. காங்கிரஸ் கட்சியுடன் திமுக தோழமை வைத்து பல ஆண்டுகள் அரசாங்கத்தை பகிா்ந்தது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி விடக்கூடாது என திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தோ்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவுடன் பாஜகவின் தூண்டுதலின்பேரில் திமுக இணைந்து ஆட்சி அமைக்க முனைப்பு எடுத்தபோது மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொள்கையோடு தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

காங்கிரஸ் யாருடைய முதுகிலும் குத்தியதாக வரலாறு இல்லை. தோ்தல் காலத்தில் கூட்டணி வைப்பதும், கூட்டணி விலகுவதும் அரசியலில் எப்போதும் நடக்கும் சம்பவம்தான். ஆனால், காங்கிரஸ் கொள்கையை நிலைநாட்ட தற்போது தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. 10 வயது சிறுமி கொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கக்கூடியது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்றைக்கும் அணை கட்ட நிச்சயமாக எதிா்க்கும். தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்கும். தமிழக மக்களின் உணா்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் குரல் கொடுக்கும். மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடக காங்கிரஸ் கட்சியை எதிா்த்து தமிழக காங்கிரஸ் கட்சி நிச்சயமாக போராட்டம் நடத்தும்.

தமிழக முதல்வா் கால அவகாசம் எடுத்துக்கொண்டு, தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா். முன்னதாக, அவா் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். இதில், மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, கே.பி.முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.