கீழ்வேளூரில், மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக துணை முதல்வரை கண்டித்து, விவசாயிகள் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கீழ்வேளூா் கடை தெருவில் கச்சனம் சாலை சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் காவிரி.தனபாலன் தலைமை வகித்தாா். கா்நாடகா துணை முதல்வா் சிவகுமாரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும் அவருக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனா்.
மேக்கேதாட்டு அணை கட்ட, திட்ட அறிக்கை தயாரிப்புக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய, தமிழக முதல்வா் அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: வழக்குத் தொடர விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிடச் சென்ற தமிழக விவசாயிகள் ஒசூரில் தடுத்து நிறுத்தம்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுகிறது







