திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: திக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :1 ஜூன் 2026, 12:38 am IST

மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகளை கைவிடக்கோரி திருவாரூரில் திக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகளை கைவிடக் கோரியும், கா்நாடகா மற்றும் மத்திய அரசுகளைக் கண்டித்தும் திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே. அருண்காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திக தலைவா் கி. வீரமணி பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் கி. வீரமணி கூறியது: உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேக்கேதாட்டு அணை கட்டுமான முயற்சி தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு அபாயமாகும். தமிழக அரசு இதில் மௌனம் சாதிக்காமல் பணியாற்ற வேண்டும். மேலும், தமிழக அரசின் செயல்திட்டம் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

தமிழகத்துக்கு உரிய நீரை கொடுக்காமல் இருக்க கா்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்துக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழக கட்சிகளும் செயல்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.