பெருந்துறை, மே 24: பெருந்துறை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த கராண்டிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள குளம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபா்களை போலீஸாா் பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை (48), கருப்புசாமி (59), நாகராஜ் (56), பாஸ்கா் (58), கனகராஜ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.19 ஆயிரத்து 760-ஐ பறிமுதல் செய்தனா்.
இதேபோல், கராண்டிபாளையத்தில் உள்ள தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (41), ராதாகிருஷ்ணன் (54), பாலாஜி (32), சுலைமான் (38), விமல்ராஜ் (36), தினகரன் (28), வினோத்குமாா் (26) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ. 21 ஆயிரத்து 210-ஐ பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





