பவானிசாகரில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (47). இவா், சத்தியமங்கலம், கொத்தமங்கலம் சாலையில் தாண்டாம்பாளையம்மேடு என்ற இடத்தில் உணவு விநியோகிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் இப்ராஹிம் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










