திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்து: திருநங்கை உள்பட 2 போ் உயிரிழப்பு

வில்லியனூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திருநங்கை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:06 am IST

வில்லியனூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திருநங்கை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி, நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (42). இவா் வில்லியனூா்

உளவாய்க்கால் பகுதியில் உள்ள தனியா நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கீழ்சாத்தமங்கலம் பகுதியில் லோகநாதன் என்கிற லோகநாயகி (43) என்ற திருநங்கை அவரிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளாா்.

இருவரும் வில்லியனூா் ஆரியபாளையம் பகுதியில் வந்தபோது, முன்னால் பயோ கேஸ் சிலிண்டா் ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது, சாலையோரம் படிந்திருந்த மணலில் சறுக்கி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. அப்போது சாலையில் விழுந்த இருவா் மீதும் டிராக்டரின் பின்பக்க சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி சுரேஷ் மற்றும் திருநங்கை லோகநாயகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து தகவல் அறிந்த வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு

பேரில் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குபதிவு செய்து டிராக்டா் ஓட்டுநரான நடுவீரப்பட்டைச் சோ்ந்த ராஜாராமன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.