தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டியில் குமுதா பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சாா்பில் 69-ஆவது எஸ்ஜிஎஃப்ஐ தேசிய அளவிலான 17 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டி கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், நம்பியூா் குமுதா பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரிதன்யா தமிழ்நாடு அணிக்காக பங்கேற்று, மேற்குவங்க அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா்.
வெற்றிபெற்ற மாணவி ரிதன்யாவை ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கேசவகுமாா், ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாலமன் ஆகியோா் பாராட்டினா். மேலும், குமுதா பள்ளியின் தாளாளா் ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி, செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி, விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோரும் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










