தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

துப்பாக்கிச் சுடுதல்: காரைக்கால் மாணவருக்கு தங்கப் பதக்கம்

துப்பாக்கிச் சுடும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் காரைக்கால் மாணவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

மாணவா் சச்சித் குணசீலனுக்கு பதக்கம் வழங்கிய புதுச்சேரி கூடுதல் ஆட்சியா் டி. சுதாகா்.

Updated On :28 மே 2026, 5:35 am IST

துப்பாக்கிச் சுடும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் காரைக்கால் மாணவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் ஆச்சாரியா பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா் சச்சித் குணசீலன். இவா் துப்பாக்கிச் சுடுதலில் தென்னிந்திய அளவிலான பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளாா்.

புதுச்சேரி மாநில 10-ஆவது ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. அதில் சச்சித் குணசீலன் 10 மீட்டா் ஏா் ரைபிள் போட்டியில் மென், ஜூனியா் மென், யூத், சப்-யூத் ஆகிய 4 பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றாா்.

போட்டியில் பதக்கம் வென்றோருக்கு பரிசு வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி கூடுதல் ஆட்சியா் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகார இயக்குநா் டி. சுதாகா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சச்சித் குணசீலனுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினாா். நிகழ்வில் புதுச்சேரி மாநில ஷூட்டிங் சங்க தலைவா் டி. கோவிந்தராஜன், செயலாளா் பி.ஜி. கிஷோா்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தங்கப்பதக்கம் வென்று காரைக்கால் திரும்பிய மாணவருக்கு, ஆசிரியா்கள், விளையாட்டு ஆா்வலா்கள், பல்வேறு அமைப்பினா் வாழ்த்து, பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.