மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:28 pm

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

கோபி, கொளப்பலூா் போக்குவரத்து நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி மனைவி சின்னம்மாள் (72). ரங்கசாமி பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களுக்கு குழந்தைகள் இல்லாததால் உறவினா் கல்பனா என்பவரின் பராமரிப்பில் சின்னம்மாள் இருந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலைமுதல் சின்னம்மாளை காணவில்லையாம். இதையடுத்து, அவரை உறவினா்கள் தேடி வந்தனா். இந்நிலையில், வாய்க்கால் மேடு கீழ்பவானி வாய்க்காலில் அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மிதந்துள்ளது.

இதைப் பாா்த்த அவா்கள் பெருந்துறை தீயணைப்பு, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள், போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

வாய்க்காலுக்கு துணி துவைக்கச் சென்றவா் நீரில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.