மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோபி அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூண்டில் பிடிபட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழந்தது.

News image

உயிரிழந்த சிறுத்தை.

Updated On :28 மார்ச் 2026, 8:45 pm

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூண்டில் பிடிபட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழந்தது.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம், விளாங்கோம்பை, குண்டேரிப்பள்ளம் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் வனப் பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகளைத் தாக்கி கொன்று வந்தது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, டி.என்.பாளையம் வனச் சரகா் ஜான் பீட்டா் தலைமையில் வனத் துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் பகுதியில் மூா்த்தி என்பவரது தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை கடந்த வியாழக்கிழமை சிக்கியது. இதையடுத்து, பிடிபட்ட சிறுத்தைக்கு உடலின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டதால் மயக்க ஊசி செலுத்தி வன மருத்துவா் சிகிச்சை அளித்து வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுத்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் துணை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகளோடு சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.