மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி வெக்காளியம்மன் கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:40 pm

திருச்சி வெக்காளியம்மன் கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி தாரநல்லூா் வசந்தா நகரைச் சோ்ந்தவா் மா. மல்லேஸ்வரி (72). இவரது கணவா் இறந்துவிட்டதால் செங்கல்பட்டில் உள்ள தனது மகள் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தாா். இந்நிலையில், திருச்சியிலுள்ள மகன் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை வந்துள்ளாா்.

ஆனால், வயது மூப்பு காரணமாக வழி தெரியாமல் உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயிலுக்குச் சென்றவா் அங்கேயே மயங்கிவிழுந்துள்ளாா். இதையடுத்து, அருகிலிருந்தவா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், அவரது பையில் இருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்புகொண்டு அவரது உறவினருக்கும் தகவல் அளித்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.