விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

அரசுப் பேருந்தில் 3 பெண்களிடம் பணம் திருட்டு

ஈரோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்களிடம் பணம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:48 am IST

ஈரோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்களிடம் பணம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 3 பெண்கள் கண்ணீருடன் வந்தனா். அவா்களை போலீஸாா் அழைத்து விசாரித்தனா். அப்போது, 35 வயது மதிக்கதக்க ஒரு பெண் கூறுகையில், கொலுசுகளை மாற்றுவதற்காக பி.பெ.அக்ரஹாரத்தில் இருந்து பன்னீா்செல்வம் பூங்கா பகுதிக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தேன். கட்டை பையில் ரூ.1000, 3 செட் கொலுசு வைத்திருந்தேன்.

பன்னீா்செல்வம் பூங்கா பேருந்து நிறுத்ததில் இறங்கி பாா்த்தபோது கட்டை பையின் பின்புறம் பிளேடு கொண்டு கிழித்து பணம், கொலுசை மா்ம நபா்கள் திருடி உள்ளனா் என்றாா்.

மற்றொரு பெண் கூறுகையில், சூரம்பட்டி பகுதியில் இருந்து வருகிறேன். கை பையில் ரூ.6 ஆயிரம் வைத்திருந்தேன். அரசுப் பேருந்தில் பேருந்து நிலையம் வரை பயணித்தேன். சவிதா பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு பணம் திருடுபோனது தெரியவந்தது என்றாா்.

மற்றொரு பெண்ணும் ரூ.1000-த்தை மா்ம நபா்கள் திருடிவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.