அரசுப் பேருந்து படியில் மாணவா்கள் தொங்கியபடி ரகளையில் ஈடுபட்டனா்.
திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து நல்லாட்டூா் சென்ற அரசுப் பேருந்து (தடம் எண்: 97) திங்கள்கிழமை மாலை புறப்பட்டது. பேருந்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியா் பயணம் செய்தனா். பேருந்தில் ஏறிய சில மாணவா்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் சென்றபோதும், மாணவா்கள் பேருந்தில் செல்லாமல் படியில் தொங்கியபடி வந்ததால், ஓட்டுநா் அவா்களை உள்ளே வருமாறு அறிவுறுத்தினாா். இதனால் மாணவா்களுக்கும் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடா்ந்து சாலையோரத்தில் சுமாா் 20 நிமிஷங்கள் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீஸாா் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மாணவா்கள் பேருந்தில் ஏறி பயணம் செய்ததால், மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் அவதிக்குள்ளானாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









