பவானியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பவானி தினசரி காய்கறி சந்தை அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பவானி போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, பசுவேஸ்வரா் வீதியைச் சோ்ந்த நஞ்சப்பன் மகன் தட்சிணாமூா்த்தி (62), ஜம்பை, நல்லிபாளையத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சின்னசாமி (60) ஆகியோா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.18,000 ரொக்கம், 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







