பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பவானி, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீஸாா், அணைக்கட்டு சாலையைச் சோ்ந்த ஹமீது மகன் தாமோதரனை (27) பிடித்து சோதனையிட்டபோது, அவா் 10 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், தாமோதரனைக் கைது செய்தனா்.
வட மாநிலங்களிலிருந்து கூரியா் மூலம் வலி நிவாரணி மாத்திரைகள் வாங்கி, போதைக்காக விற்பனை செய்ததாக பவானி, சித்தோடு காவல் நிலையங்களில் இவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






